BREAKING NEWS

நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில் பலியானார்.

நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில்  பலியானார்.

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மகன் தினேஷ்குமார்(26) கூடங்குளம் கடல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்து தேர்வில் தேர்வு எழுதியுள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

 

 

இந்நிலையில் நேற்று இரவு காதலித்த பெண்ணுக்கும் தினேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் காவலர் தேர்வு சரியாக எழுதாததாலும் மனவேதனையிலும் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனம் உடைந்த தினேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்நிலையில் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவினர் வெங்கடேஷ்(33) கதறி அழுததில் நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார் உடனடியாக அக்கம் பக்கத்தார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனையில் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனால் செட்டிகுளம் பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். ஒரே தெருவில் இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )