பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கிராமத்தில் மலைமேல் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்த திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திமுகவை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதிப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கோயில் பூசாரி தீபத்தை ஏற்ற முற்பட்டபோது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பூசாரியை தீபம் ஏற்ற விடாமல் அவர் வேஷ்டியை பிடித்து இழுத்து தடுத்து அவரை அவமானப்படுத்தியுள்ளார் என்றும் கோயில் ஆகம விதிமுறைகள் படி பூஜைகளை செய்ய விடாமல் தடுத்ததாகவும்,
இந்த செயல் ஆன்மீக பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் அமைந்திருப்பதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பூசாரியை தீபம் ஏற்ற விடாமல் தடுத்த பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் மீது ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.