செங்கல்பட்டு அடுத்த படாளம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் உள்ளிட்ட பகுதி சென்னை திருச்சி தேசிய தேசிய நெடுஞ்சாலையில் 25 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.
மகாபலிபுரம் பகுதியில் மாண்டாஸ் புயல் கரையை கடந்த நிலையில், புயலின் தாக்கத்தின் காரணமாக செங்கல்பட்டு சுற்றவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது.
நேற்று நள்ளிரவு நேரத்தில் அதிதீவிர காற்று மற்றும் மழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றின் வேகத்தால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.
அதனால் நேற்றிரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை மின்சாரம் துன்டிக்கப் பட்டிருந்தது. விழுந்த மரங்களை நெடுஞ் சாலைத்துறை வருவாய்த் துறையினர், ஊராட்சி பிரதிநிதிகள் இணைந்து அகற்றினர்.
CATEGORIES செங்கல்பட்டு