BREAKING NEWS

ஆண்டிபட்டி அருகே 4கிலோ 900கிராம் கஞ்சா கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

ஆண்டிபட்டி அருகே  4கிலோ 900கிராம் கஞ்சா  கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சீலமுத்தையாபுரம் ஓடைபகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வருசநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

 

தகவலின் அடிப்படையில் வருசநாடு காவல் துறை சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த தும்மகுண்டு கிராமத்தை சேர்ந்த 62வயதான பெருமாளை விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரை போலீசார் சோதனை செய்தனர்.

 

அதில் அவரிடமிருந்து அரசால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 50000ஆயிரம் மதிப்புள்ள 4கிலோ 900கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் பின்னர். போலீசார் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததற்காக பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )