BREAKING NEWS

பழனியில் தங்கரத லயன்ஸ் கிளப் சார்பில் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பழனியில் தங்கரத லயன்ஸ் கிளப் சார்பில் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் பழனி நகராட்சி மற்றும் அன்னை பாரா மெடிக்கல் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு பழனி தங்கரத லயன்ஸ் கிளப் சார்பாக அங்கு தங்கி உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து லயன் உறுப்பினர் பழனி முன்னாள் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கியதோடு இந்த இல்லத்தில் தங்கியிருக்கும் சுமார் 75 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். 

 

இந்த நிகழ்வில் பழனி தங்கரத அரிமா தலைவர் முருகன் ,பட்டய தலைவர் மனோகரன், உதவி தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் லோகநாதன், லயன் உறுப்பினர்கள், விரிவுரையாளர் பழனிச்சாமி, சிவா, துர்காராம், இளங்கோவன்,

 

 

சுப்பையா, அன்னை பாரா மெடிக்கல் கல்வி அறக்கட்டளை நிறுவனர் லயன் இரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பழனி நகராட்சி ஆய்வாளர்கள் கவின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )