BREAKING NEWS

மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.

மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..

 

இன்று மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சங்கரலிங்கசுவாமி கோமதிஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சங்ரலிங்க சுவாமி கோமதி அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

 

நான்கு ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்த கோமதி அம்மன் சங்கரலிங்கப் பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )