செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக செங்கம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் மகரிஷி மனேகரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துவரி- மின்கட்டண உயர்வு- பால் விலை உயர்வு- சட்டம் ஒழுங்கு சீர்கேடு திமுக கட்சியினர் அரசு அதிகாரிகளிடம் அதிகார போக்கில் செயல்படுகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கழக முன்னோடிகள் கட்சித் தொண்டர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்அரசியல்செங்கம் பேரூராட்சி அலுவலகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்