தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜ்மோகன் இவர் நேற்று முன் தினம் சண்முகநல்லூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,..
அந்த வழியாக குருக்கள்பட்டியைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் கபில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தார் அப்போது தலைமை காவலர் ராஜ்மோகன் அவரை நிறுத்தி சோதனை செய்தார் அப்போது தலைமை காவலர் ராஜ்மோகனை கபில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் கபில் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் அரிவாள் ஒன்றும் இருந்துள்ளது இது தொடர்பாக தலைமை காவலர் ராஜ்மோகன் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கபிலை கைது செய்தனர்.
CATEGORIES குற்றம்
TAGS குற்றம்சங்கரன்கோவில்சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசிதென்காசி மாவட்டம்