BREAKING NEWS

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள மஞ்சள் கோரை பகுதி திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேருக்கு காயம் ஒருவருக்கு வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.ஒருவர் உயிரிழந்தார்.

 

பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு விரைவு பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது குணசீலம் ஊராட்சியில் உள்ள மஞ்சள் கோரை பகுதியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் 11 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு வலது கை எலும்பும் எலும்பு முறிவு ஏற்பட்டது.விபத்தில் காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை,ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 50 வயது மதிக்கத்தக்கடையாளம் தெரியாத ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அவரை அடையாளம் கானும் பணியில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து சம்பவத்துக்கு வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் ஹைவே பேட்ரோல் போலீசார் மற்றும் வாத்தலை போலீசார் போக்குவரத்தை சீரமைத்து கவிழ்ந்த அரசு பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS