BREAKING NEWS

வேப்பூரில் கரும்பு ஏற்றி வந்த லாரி குப்புற கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.!

வேப்பூரில் கரும்பு ஏற்றி வந்த லாரி குப்புற கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்

கடலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையம் எதிரே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மேம்பாலம் கட்டும் பணி அப்பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் சாலையில் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.

 

 

கடந்த மூன்று மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில், நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி லால்குடி நோக்க கரும்பு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி வேப்பூர் சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து ஓட்டுநர் எவ்வித காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

 

 

சர்வீஸ் சாலையில் கரும்பு ஏற்றி வந்த லாரி கரும்புடன் குப்புற கவிழ்ந்து சாலையோரத்தில் கிடந்ததால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்தை சரி செய்த அங்கிருந்த வேப்பூர் போலீசார் பிறகு,கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த கரும்பு ஏற்றி வந்த லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

 

சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் பஞ்சர் ஆகி மற்றும் பழுதாகி நின்றாலோ அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS