BREAKING NEWS

பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.

சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் முடித்து,

 

சென்னை செல்லும் வழியில் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு ஒன்றிய செயலாளர் கசாப்பு செந்தில்குமார் ஏற்பாட்டில் புதியதாக 60 அடி உயரமுள்ள பாமக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடியேற்றும் விழாவிற்கு வருகை புரிந்த மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மாநில மாவட்ட ஒன்றிய நகர பாமக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயரம் உள்ள பாமக கட்சி கொடியை ஏற்றினார், பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜே பி என்ற ஜெயப்பிரகாஷ்,மாவட்ட தலைவர் ஆர்.வி பச்சமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் மயில்சாமி, ஆர். ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், செல், செல்லதுரை ,சுப்பிரமணி, சின்னசாமி, சுப்பன், சிலம்பு, பாட்டாயி, மணி ,உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS