சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்ரமேஷ் இவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர முருக பக்தர்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பால் காவடி போன்ற நேர்த்திக் கடன்கள் எடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம் இன்று காலை முருக பக்தர் அழகு குத்தி பின்பு பறவை காவடி எடுத்தார்.
முருக பக்தர்கள் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா என்ற பக்தி கோசத்துடன் சங்கரன்கோவில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு பறவை காவடியாக செல்கின்றனர் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்சங்கரன்கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடிதென்காசிதென்காசி மாவட்டம்பனவடலிசத்திரம்பெருமாள்பட்டி கிராமம்