BREAKING NEWS

தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.

தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி , மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), இவருடைய மனைவி வான்விழி (31) மகள்கள் நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3). யுவராஜ் டெலிமா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் நேற்று காலை குடும்பத்தோடு வெளியே சென்றவர், தொடர்ந்து கத்திரிபட்டி அருகே தமிழக- கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார், அதில் தனது மூத்த மகளுக்கு நோய் தொற்று இருந்ததாகவும் அதே நோய் தொற்று சிறிய மகளான அப்சராவிற்கும் வந்து விட்டதாகவும் எனவே இரண்டு குழந்தைகளையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாததன் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார்.

 

 

தொடர்ந்து இவர்கள் தற்கொலை செய்து கொண்ட பாலாறு தமிழக- கர்நாடக எல்லை, மேலும் அந்த இடம் தர்மபுரி சேலம் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லையாகவும் இருந்துள்ளது, தொடர்ந்து பிரேதங்கள் இருந்த இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது.

 

என்பதை தெரியவந்ததை எடுத்து பர்கூர் போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS