நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.

திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி – இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் குடி தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் மணிமாறன் (33) இவர் திரு நெடுங்களம் நாதர் கோவில் எதிரே பூக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி வீட்டில் செல்போன் வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர் ஏற்கனவே இரண்டு மூன்று செல்போன்களை நீ உடைத்து விட்டாய் அதனால் இப்பொழுது செல்போன் வாங்கி தர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த மணிமாறன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு திரு நெடுங்களநாதர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குள சுவர்கட்டையில் படுத்திருந்துள்ளார்.
அப்படி படித்திருந்தவர் தண்ணீரில் விழுந்து இறந்துள்ளார். இது யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மணிமாறனை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் இன்று காலை கோவில் தெப்பக்குளத்தில் மணிமாறனின் உடல் மிதந்துள்ளது.
இது பற்றி துவாக்குடி போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
CATEGORIES திருச்சி