கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா
சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் காமராஜபுரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
மேற்படி சோதனையின் போது காமராஜபுரம் பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (32), முள்ளிபாடியைச் சேர்ந்த ராஜசேகர்(29)திருப்பூரை சேர்ந்த திலீப் குமார்(27) பழனியைச் சேர்ந்த வைகால் சாமி(42)காமராஜபுரத்தை சேர்ந்த மனோஜ் குமார்(19)மற்றும் வீரபாண்டி(24)ஆகிய 06நபர்களை கைது செய்து நகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை தனிப்படை பறிமுதல் செய்தனர்.