BREAKING NEWS

மாநில சிலம்பாட்ட போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு.

மாநில சிலம்பாட்ட போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு.

செய்தியாளர் வி.ராஜா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு பள்ளி மாணவர் சிலம்ப போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மானாமதுரை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் ரித்திஷ்(14) மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

சிலம்ப கலையின் மீது உள்ள ஆர்வம் காரணமாக சிலம்ப பயிற்சி எடுத்து வருகிறார். பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் இரட்டைக் கம்பு பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

வெற்றி பெற்ற ரித்தீஷ் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜெயலட்சுமி, மானாமதுரை சீனி ஆசான் சிலம்ப பள்ளி பயிற்றுநர்கள் செல்வம், முனியாண்டி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
படவிளக்கம் மானாமதுரை கல்குறிச்சி அரசு பள்ளி மாணவர் ரீத்திஷ் மாவட்ட சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்று மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

Share this…

CATEGORIES
TAGS