BREAKING NEWS

மானாமதுரையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி.

மானாமதுரையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மஹாலில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியை நடைபெற்று வருகிறது இந்த வாழ்வியல் கண்காட்சியில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு, குடும்ப நல ஆலோசனை,

 

மது போதையில் இருந்து விடுபட ஆலோசனை, உடல்நலம் காக்கும் மருத்துவ அறிவுரை, அறிவு தேடலுக்கு புத்தக அரங்கம், கண்ணைக் கவரும் கருவியல்,வியக்க வைக்கும் விஞ்ஞானம், ஆராய்த் துண்டும் ஆன்மீகம், நலமுடன் வாழ நற்போதனை மற்றும் நறுமணப் பொருட்கள்,

 

 

உலர் பழங்கள் விற்பனை, வண்ணத்துணிகள் விற்பனை மண்பாண்ட பொருட்கள், கண்காட்சியில் வைக்கப்பட்டு கண்காட்சி பார்க்கும் வரும் பொதுமக்களுக்கு மண்ணின் வளம் காக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த கண்காட்சிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கழக உடன்பிறப்புகளுடன் பார்வையிட்டார்.

 

 

அதனை தொடர்ந்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கண்காட்சி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் பற்றியும் அமைதியை நோக்கி வாழ்வியல் அறிவு பலகை கண்பித்து கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்த கண்காட்சியில் குழுவின் சார்பாக சட்டமன்ற உறுப்பினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

 

நிகழ்வில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் இதய அப்துல்லா அவர்களும், மூத்த நிர்வாகி ஏ.ஆர்.பி.முருகேசன் அவர்களும், மாநில பொதுகுழு உறுப்பினர் ஏ.சி சஞ்சய் காந்தி, மானாமதுரை 5வார்டு நகர்மன்ற உறுப்பினர் புருசோதமன் அவர்களும் காங்கிரஸ் உறுப்பினர் ராமர், மற்றும் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அவர்களும், திமுக, காங்கிரஸ், கழக நிர்வாகிகளும் கண்காட்சியில் கலந்து கொண்டனர். 

 

CATEGORIES
TAGS