BREAKING NEWS

தேனியில் கல்லூரி பட்டமளிப்பு விழா.

தேனியில் கல்லூரி பட்டமளிப்பு விழா.

தேனி மாவட்டம் தேனி வடபுதுப்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

 

 கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இந்த கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இளங்கலை முதுகலை பிரிவு மாணவ மாணவியர் சுமார் 852 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.

 

 

 இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைச் சேர்மன் ஆறுமுகம் மாணவ மாணவர்களுக்கு பட்டமளித்தனர் .

 

மேலும் கல்லூரியின் தலைவர் ராஜா மோகன், துணை தலைவர் கணேஷ், பழனியப்பன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS