BREAKING NEWS

தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி

தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி

செய்தியாளர் க. கார்முகிலன்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் மக்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.

 

தை முதல் நாளான பொங்கல் திருநாளன்று புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியபகவனுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் திருநாள் தை பொங்கல் திருநாள். உழைப்பிற்கும் பயிர் வளர்ச்சிக்கும் உதவும் கால்நடைகளுக்கு நன்றியரிவித்தலை புலப்படுத்தும் பொன்னாளாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

 

கன்னி பெண்கள் மார்கழியில் நோன்பு நோற்று கோல மிட்டு மலர் இட்டு வைத்த சாணத்தால் தட்டிய சிறிய விராட்டிகளை கொண்டு ஆற்று துறையில் பொங்கலிட்டு படைத்து உணவு உண்டு. கும்மியடித்து மகிழும் இனிய நாளாக கன்னி பொங்கல் விளங்குகிறது. இந்நாளில் சிறியவர்கள் பெரியவர்கள் உறவினர்கள் கண்டு ஆசிபெறும் காரணத்தால் இந்நாள் கணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.

உழைப்பின் பயனை பெற்று மக்கள் உள்ளம் மகிழ்வதோடு இயற்கைக்கும் இறைவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் முகமாக நடைபெறும் இவவிழாவை இனிதே கொண்டாடி தாமும் நலம் பெற்று சமுதாயமும் நலம் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச்சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என அருளாசி வழங்கினார்.

 

 

CATEGORIES
TAGS