BREAKING NEWS

சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர்.

சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

 

சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன். இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார். சுமார் 50 வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

 

மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

 

அப்போது சங்கரன்கோவில் குண்டு தெரு பகுதியைச் சேர்ந்த சபரிவாசன் (22) மற்றும் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (22) ஆகிய இருவரும் சேர்ந்து இரண்டு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.

 

அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

 

  மேலும் காவல்துறை விசாரணையில் அவர்கள் இருவரும் சங்கரன்கோவில் மற்றும் அண்டை மாவட்டங்களில் தங்களது கைவரிசையை தொடர்ந்து காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

 

CATEGORIES
TAGS