தேனி ஆட்சியரிடம் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமான அரசு வேலை வேண்டி மனு வழங்கினர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்து வந்த பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புணர்வர்கள் நேற்று தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அப்போது தேனி கலெக்டர் பண்ட் மற்றும் 5 ஸ்டார் ஜென்டில்மேன் ஆகியவற்றின் ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புணர்களாக நியமிக்க பட்டு, கொரோனா தொற்று பாதிப்பு காலங்களில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம்.
இதில் எங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, தொற்று நீங்கிய பின்னர் மீண்டும் உடனடியாக பணிக்கு வந்து, இரவு, பகல் பாராது பணியாற்றி வந்தோம்.
தற்போது பார்த்து வந்த வேலை இல்லாமல் குடும்பத்தை இயக்கமுடியாமல் வறுமையில் வாடி வருகின்றோம்.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களின் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதே மருத்துவமனையில் நிரந்தரமான அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட மனுவை தேனி ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினார்கள்.