விருத்தாச்சலம் அருகே நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் (வயது – 35) கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் என அவரை தேடி வந்த நிலையில் அவர் அந்த கிராமத்தில் இருந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில், தீயணைப்பு துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, தொட்டியில் அழுகிய நிலையில் கிடக்கும் சடலத்தை,
கயிறுகள் கட்டி மீட்டனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
CATEGORIES கடலூர்
TAGS அழுகிய நிலையில் சடலம்கடலூர் மாவட்டம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நீர் தேக்க தொட்டியில் சடலம்ராஜேந்திர பட்டினம் கிராமம்விருத்தாச்சலம்