BREAKING NEWS

பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.

பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த அக்கரைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மகேஷ் கார்த்திக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.கலியமூர்த்தி கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு கருத்துக்களை விரிவாகும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

 

தொடர்ந்து பள்ளி மாணவிகளிடையே உரையாடிய கலியமூர்த்தி படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்ற கோணத்தில் பெற்றோர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.

 

 

மேலும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் கல்வி முறைகள் பற்றி பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறி நிறைவு செய்தார்.

 

 

இந்நிகழ்வில் பள்ளி நிறுவனர் சுப்பையா தாளாளர் சுசீலா இயக்குனர் கார்த்திகேயன் மேனேஜிங் டிரஸ்டி நாராயணசாமி, வீரமணி, பள்ளி முதல்வர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பணிரெண்டாம் ஆண்டு காண ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.

 

CATEGORIES
TAGS