BREAKING NEWS

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கி எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் சேமிப்புத் தொகையை மோசடி செய்ய உறுதுணையாக இருந்த மத்திய அரசை கண்டித்து.. பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வைத்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

 

நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் வரவேற்று பேசினார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே ரவி அருணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, வழக்கறிஞர் வெங்கடரமணன், அம்பை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராம் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வி.பி துரை, வின்சென்ட், அந்தோணிசாமி, அம்பிகா மாணிக்கம்,

 

 

மாவட்ட இலக்கிய அணி செல்வம் அம்பை நகர செயலாளர் இருதய ராஜ் சிவாஜி செல்லப்பா குத்தாலம் ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

CATEGORIES
TAGS