BREAKING NEWS

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டதேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர்.

 

 

அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஐந்து பேர் மட்டும்அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் எனதெரிவித்தனர்.

 

பின்பு வருவாய் கோட்டாட்சியர் சந்தித்த தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பல வருடங்களாக தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கோழி பெற்று வந்த நாங்கள் தற்பொழுது வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து காய் ஒன்றுக்கு 77 பைசா பெற்றுக் கொண்டு வேலை செய்வதாகவும்,

 

அவர்களுக்கு தேங்காய் வியாபாரிகள் ஆதரவு தந்து தங்கும் வசதி சாப்பாடு உள்ளிட்டவர்களை தங்களது செலவு செய்து கொடுத்து வேலை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் இது குறித்து எங்களுக்கு முறையான கூலி கொடுக்க வேண்டும் தொடர்ந்து வேலை எங்களுக்கு நிரந்தரமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 

 

தென்னை விவசாயிகள் எங்களுக்கு தகுந்த கூலி கொடுக்க வரும் நிலையில் தேங்காய் வியாபாரிகள் தென்னை விவசாயிகளிடம் முறையிட்டு தடுப்பதாகவும் தெரிவித்தனர் இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும்,

 

 

 

நிலை ஏற்பட்டுள்ளது குழந்தைகள் படிப்பு முதல் மற்ற செலவுகள் வரை அனைத்தும் எங்களால் சரி செய்து கொள்ள முடியாத நிலையில் தற்போது உள்ளதாகவும்,

 

வருவாய் கோட்டாட்சியர் இதற்கு உடனடியாக தேங்காய் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு தங்களது மனுவினை கொடுத்தனர்.

 

 

மேலும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களது குடும்பத்தோடு குழந்தைகளோடும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

 

மேலும் அவர்கள் எங்களுக்கு அதிக கூலி வேண்டாம் நிரந்தர வேலை முறையான கூலிகள் கொடுத்தால் மட்டுமே போதும் என கேட்டுக்கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS