BREAKING NEWS

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கூரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கூரத்தாழ்வான் திருக்கோவில் உள்ளது.

 

இத்திருக்கோவில் ஆண்டுதோறும் கூரத்தாழ்வான் அவதாரம் எடுத்த தை மாதத்தில் திருவாதாரம் மகாஉற்சவம் வெகுவிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 1013வது ஆண்டு திருவவதார திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் ஒன்பதாம் நாளான இன்று மகோத்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் பல்வேறு வீதிகளில் வீதி உலாவின் வந்து மாலை திருக்கோவிலில் வந்தடையும். திருதேரின் போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

 

இந்த திருத்தேர் உற்சவத்தை காண கிராம பொதுமக்கள், வெளியூர் பக்தர்கள் என ஏராளமான பக்தர்களுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

CATEGORIES
TAGS