தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 80 வயது மூதாட்டி ரயில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கருப்பாயி வயது 80 இவர் இன்று தனது வீட்டின் பின்புறமாக உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது,
சென்னையில் இருந்து செங்கோட்டை வரை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தென்காசி
TAGS இலவங்குளம் கிராமம்சங்கரன்கோவில்தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்