BREAKING NEWS

உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.

உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.

தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது.

 

இதனையொட்டி தஞ்சை மாவட்டம் கண்டிதம்பட்டு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாரம்பரிய சிக்கு கோலம் மூலம் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் கண்டிதம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தமிழ்செல்வி தலைமையில் கண்டிதம்பட்டு பொதுமக்கள் பலர் தமிழ் கவிஞர்கள், தமிழ் ஐம்பெருங் காப்பியங்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாரம்பரிய சிக்கு கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறந்த கோலங்கள் வரைந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில் கண்டிதம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தமிழ்செல்வி , ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி , கண்டிதம்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் , நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாரயணவடிவு நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS