BREAKING NEWS

அந்தியூரில் தென்னை மரங்களுக்கு நுண்ணுயூட்டங்கள் கொடுப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

அந்தியூரில் தென்னை மரங்களுக்கு நுண்ணுயூட்டங்கள் கொடுப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் மற்றும் வேம்பத்தி பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூக்கநாயக்கன்பாளையம் தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தங்கள் திட்டத்தின் கீழ் இப்பகுதிகளுக்கு சென்று தென்னை மரங்களில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகளில் தாக்குதலில் இருந்து தடுப்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினார்.

 

மேலும் ஒட்டுண்ணிகளின் பயன்பாடு ஊட்டச்சத்து விதை பொதி ஆகியவற்றின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

Share this…

CATEGORIES
TAGS