BREAKING NEWS

கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு தேர்தல்கள் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் ஜனநாயக முறைகள் தேர்தல் நடைபெறவில்லை பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடைப்பெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் தான் தெரியும். மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

 

 

கியாஸ் விலை உயர்ந்திருக்கிறது பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். தமிழக அரசு கியாஸ் மானியம் தருவதாக தி.மு.க.தேர்தல் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும். கியாஸ் விலையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

 

 

அதிராம்பட்டினம் வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது உடல் பாதுகாப்பாக தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வரும் மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சாதிக் அலி, அசோக் குமார்அருண்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS