BREAKING NEWS

மேகதாதுஅணை விவகாரம் தஞ்சையில் எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.

மேகதாதுஅணை விவகாரம்  தஞ்சையில்  எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் கழகபொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார், மாவட்ட இளைஞரணி சூரிய பிரகாஷ், மாவட்ட பொருளாளர் ஆர்.எஸ்.கண்ணபிரான், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் பேசிய தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ரெத்தினசாமி வரும் 29ந்தேதி தஞ்சையில் கழக பொதுசெயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றிய, நகர , கிளை கழக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS