குத்தாலம் அருகே 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு

குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய எம் எல் ஏ.
17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், சேத்திரபாலபுரத்தில் பழுதடைந்து காணப்பட்ட நியாய விலைக் கடையை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் என மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் அவர்களிடம் சேத்திரபாலபுரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பழுதடைந்த கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொது மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-2023-ல் இருந்து ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
தொடர்ந்து புதிய பொது விநியோக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் கலந்துகொண்டு புதிய பொது விநியோக நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அரிசி,பருப்பு, ஜுனி உள்ளிட்டபொருட்கள் வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில்மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், ஒன்றிய குழு பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலாளர் வைத்தியநாதன், குத்தாலம் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.