அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு வாக்குப்பதிவு முறை மூலம் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு தேர்தல் வாக்குப்பதிவு முறை மூலம் நேற்று நடைபெற்றது அர்ஷத் தலைமையில் 13 நபர்களும்
செய்யது அலி தலைமையில் 8 நபர்களும் போட்டியிட்டனர்,வஃக்பு வாரிய தேர்தல் அதிகாரி அப்துல்லா முன்னிலையில் வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது முடிந்தது மொத்த வாக்குகள் 498ல் பதிவான வாக்குகள் 281 செல்லாதவை 10 இத்தேர்தலில் 242 வாக்குகள் பெற்று அர்ஷத் மூத்தவல்லி பதவியை பெற்றார் இதனை அடுத்து ஊர் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
TAGS MayiladuruaiMayiladuruai districtமயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்மாவட்ட செய்திகள்மாவட்டச் செய்திகள்முக்கிய செய்திகள்