நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி; நெல்லை மாவட்டத்தின் சார்பில் சிறுவர், சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி.
32 வது சப் ஜூனியர் சிறுவர், சிறுமியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தின் சார்பில் விளையாட இருக்கும் வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதற்காக மாவட்டத்திலிருந்து ஐந்து பேர் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டம் பணகுடியில் கபடி அமைச்சூர் குழு சார்பாக மாவட்ட துணை தலைவர் மணிவர்ணபெருமாள் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இங்கு தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர், சிறுமிகளிலிருந்து தமிழக அணிக்கு வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் சேலத்தில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிவிளையாட்டு செய்திகள்
