BREAKING NEWS

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி!!!

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் வேணி அம்மாள் வயது 65 திருமணமாகாதவர் இவர் தனது சொந்தமான நிலத்தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வேணியம்மாள் தனது வாழத் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார் இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுக்கா போலீஸ்- சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, சாலமன், ஏட்டு ராமு உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தி, வேணி அம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CATEGORIES
TAGS