BREAKING NEWS

ஆட்டோ தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆட்டோ தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.செல்வம் தலைமை தாங்கினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்து விட வேண்டும்,
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும், தமிழகம் முழுவதும் பைக் டாக்ஸியை தடை செய்திட வேண்டும்,


மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணத்தை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தருவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.அனிபா, மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.மோகன், மாவட்ட பொருளாளர் டி.வீரமணி மற்றும் பழனிவேல், ஏ1 TT மணி, ராஜேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS