BREAKING NEWS

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6.20 லட்சம் மதிப்பில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடை யை இன்று 29/04/2023 வெள்ளிக்கிழமை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான சி.மகேந்திரன் எம் எல் ஏ அவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய கழக துணைச் செயலாளர் ராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மோகனவள்ளி ராஜசேகரன், துணை தலைவர் விஜயகுமார், தும்பலபட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வகுமார், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS