BREAKING NEWS

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கதவனி டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஊத்தங்கரை – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படும் இந்தச் செங்கல் சூளையில் இருந்து வெளியாகும் புகை மூட்டம், பார்பதற்கே ஏதோவொரு வளிமண்டலத்தில் உள்ள நுழைந்து வெளியே வருவது போல் இருக்கிறது.

அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

இதனால் இருமல், சுவாச கோளாறு,  மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும, அவர்களுக்கு தேவையான வருவாய் செங்கள் சூளையின் உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்வாதாகவும், மாதம் மாதம் மாமுல் கொடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் மத்தியில் மத்தியில் பறவலாக பேசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சாலை ஓரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், செங்கல் சூளைகள் முறையாகப் புகைபோக்கி அமைத்து, புகை விண்ணை நோக்கி மேலே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், போக்குவரத்துக்கும், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் செங்கல் சூளைகள் செயல்பட அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS