சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சரியாக 5.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள் பால், பன்னீர், திரவியம் விபூதி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் சோடசை தீபாராதனை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் காலை மாலை வீதி உலா நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் வரும் மே மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
TAGS ஆன்மிகம்சங்கரன்கோவில்சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில்சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோயில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்