சோரீஸ்புரம் பயணிகள் நிழற்குடை திறப்பு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சி, சோரீஸ்புரத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
தூத்துக்குடி சோரீஸ் புரத்தில் 10 லட்சம் மதிப்புள்ள புதிய பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ. சண்முகையா திறந்து வைத்தார்
தூத்துக்குடி கோரம் பள்ளம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனடைப்பு ஊராட்சி பகுதி சோரீஸ் புரத்தில் புதிய பயணியர் நிழற்குடையினை எம்.எல்.ஏ. சண்முகையா திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கோரம் பள்ளம் ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனடைப்பு ஊராட்சி பகுதியில் உள்ள சோரீஸ் புரம் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை சார்பில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் நிதியின் (2023 – 2024) கீழ் கட்டப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள புதிய பயணியர் நிழற்குடையினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதி நாகராஜன், ஒப்பந்ததாரர் ஏ.எஸ். அய்யாதுரை, திமுக சங்கர், வீரபாண்டி, கிளை செயலாளர் சின்னத்துரை, கிளை செயலாளர் வினோத், மணிகண்டன், சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி மணிகண்டன், மகளிரணி நிர்வாகிகள் சுப்பு லெட்சுமி, மற்றும் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கழக தோழர்கள், உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.