தவேக தலைவர் விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

தவெக தலைவர் விஜய் கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வருகை தருகிறார் அவரை பார்ப்பதற்காக தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ரசிகர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிகாலை முதலே மதுரை விமான நிலையத்திற்கு 1500 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையம் உள்ள வளாகத்திற்குள் அதிக கூட்டம் சேர்வதால் காவலர்கள் விமான நிலையம் வெளி வளாகத்தில் அவர்களை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
14 வருடங்களுக்கு பிறகு விஜய் மதுரை வருகிறார் எனவும் கட்சி தொடங்கிய பின் முதன் முதலில் மதுரைக்கு வருகிறார் எனவும் இதனால் விஜயை காண்பதற்காக ஆர்வம் மிகுதியில் விமான நிலையத்தில் காலை முதலே காத்திருந்தனர்
தற்போது விமான நிலையம் வெளிவளாகத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ஷேர் ஆட்டோ,இருசக்கர வாகனம், கார், ஆம்னி பேருந்து மூலம் வந்த வண்ணம் இருக்கின்றனர் அவர்கள் காவல்துறையினால் தடுத்து நிறுத்தி விமான நிலைய வெளிவகாலத்தில் விஜயை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் காவல்துறையினர் சோதனைக்கு பயணிகள் மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் விமான நிலையம் வெளிவளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.