போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபி மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூபாய் 1.5 லட்சம் கையூட்டுப் பெற்ற வேலூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மீது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இதனை கோபி என்பவர் நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த சில மாதங்களாக பணியாற்றிய ஒரு பெண் தன்னை பாலியல் ரீதியாக கோபி சீண்டியதாக வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட வேலூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபியை அழைத்து பேசி உங்கள் மீது புகார் வந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படி வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ரூபாய் 1.5 லட்சம் தர வேண்டும் என்று அவரை மிரட்டி உருட்டி அவரிடம் ரூபாய் 1.5 லட்சத்தை கறந்து விட்டார் என்ற தகவல் காட்டுத்தீ போல கணியம்பாடி பகுதியில் பரவி வருகிறது.
இந்நிலையில் ரூபாய் 1.5 லட்சத்தை கொடுத்துவிட்டு கோபி போக்சா சட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இந்நிலையில் இந்த காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் காரில் வலம் வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். எந்த வழக்கையும் உரிய முறையில் விசாரிப்பது கிடையாது என சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசபப்படுகிறது
இது போன்ற பல்வேறு புகார்கள் இவர் மீது வந்த வண்ணம் உள்ளது. ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வேலூர் சரக டிஐஜி தேவராணி மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் இது நடந்தது உண்மையா இப்படி ஒரு வழக்கை பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூபாய் 1.5 லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஒன்றும் அறியாதவர் போல காரில் வளம் வந்து கொண்டு உள்ளார். சிலம்பரசன் என்கிற காவல் உதவி ஆய்வாளர்.
இவர் மீது உரிய விசாரணை நடத்தினால், அது அனைத்தும் உண்மையென தெரியவரும் பட்சத்தில் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்திட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட புகார்தாரரும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்படி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று காவல் துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா?.
காவல்துறையில் உள்ள இது போன்ற களைகளை களைய நடவடிக்கை எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்