மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.
![மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம். மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-09-09-at-12.55.43-PM-1.jpeg)
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் ஒன்றிய அரசின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து தேமுதிக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் தேமுதிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி மாவட்டத் துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஒன்றிய அரசே மத்திய அரசே பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, டீசல் விலை ஏறிப்போச்சு, சுங்கவரி ஏறிப்போச்சு, குறைத்திடுக குறைத்திடுக சுங்கவரியை குறைத்திடுக என்று மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 1 பெண் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிகவினரை
வையம்பட்டி காவல்துறையினர் கைது செய்து வையம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.