BREAKING NEWS

விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.

விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.

அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும்
மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா என்பவரின் மகன் சக்திவேல் விவசாய கூலி பணிக்கு டாடா ஏஸ் வாகனத்தில் அழைத்து வந்தபோது சித்துடையார் கிராமம் வீரனார் கோவில் அருகே நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த பெண்கள் அலறியபடி கருவேல முட்கள் மற்றும் பள்ளத்தில் விழுந்தனர் இதை கண்ட அவ்வழியே சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்ததோடு மீட்புபணியில் ஈடுப்பட்டனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 16 பேர்கள் செந்துறை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதோடு மேல் சிகிச்சைக்காக இருவரை அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து குவாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS