BREAKING NEWS

வேலூரில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வேலூரில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலட்சுமி பள்ளி கொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்கான படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். குறிப்பாக வாக்காளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்த வாக்காளர்களுக்கான படிவங்களை வழங்கும் பணியின் போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS