BREAKING NEWS

60 செங்கல் சூளைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தும் காவல் ஆய்வாளர் சுபா: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா?

60 செங்கல் சூளைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தும் காவல் ஆய்வாளர் சுபா: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது கணியம்பாடி இங்கே வேலூர் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா பணியாற்றி வருகிறார்.

இந்த சுபா வசூல் வேட்டையில் மிகவும் கைதேர்ந்தவர் ஆவார் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கணியம்பாடி பகுதியில் 63க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த செங்கல் சூளைகளை இயக்குவதற்கு தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறிக்கொண்டு காவல் ஆய்வாளர் சுபா இந்த செங்கல் சூளை அதிபர்களை மிரட்டி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தலா ரூபாய் 10,000 ஒரு சூளைக்கு தன்னிடம் கப்பம் கட்ட வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை இவர்கள் மீது திணித்துள்ளார்.

இதனால் செங்கல் சூளை அதிபர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஏன் செங்கல் சூளைக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்று கேட்டால் நீங்கள் திருட்டுத்தனமாக மண் கடத்துகிறீர்கள்.

இப்படி லாரிகளில் கடத்தப்படும் மண்ணுக்கு சேர்த்து தான் இப்படி கப்பம் கேட்கப்படுகிறது என்று விளக்கம் தருகிறார் காவல் ஆய்வாளர் சுபா என்று செங்கல் சூளை அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் செங்கள் சூளை அதிபர்கள் கழுத்தில் துண்டை போட்டு வசூல் செய்து கொள்கிறார் காவல் ஆய்வாளர் சுபா. பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள்.

ஆனால் இங்கு பேயே இந்த பெண் காவல் ஆய்வாளர் சுபாவை கண்டு ஓடிவிடும் என்ற நிலை நிலவுகிறது. இப்படி அசாதாரண சூழ்நிலை நிலவுவதற்கு காரணமே அவரது அதிரடி நடவடிக்கை தான். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள்.

அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்று கொக்கரிக்கிறார் இந்த காவல் ஆய்வாளர் சுபா. இதனால் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர் செங்கல் சூளை அதிபர்கள்.

ஒரு தொழில் நடத்தி அதில் நிம்மதியாக காலத்தை கழிக்க முடியாத நிலைக்கு இந்த செங்கல் சூளை அதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாங்கள் மண் எடுப்பதற்கு முன் அனுமதி பெற்றுள்ளோம் என்று சொல்லியும் அதையெல்லாம் நான் கேட்க மாட்டேன்.

எனக்கு நீங்கள் பணம் தர வேண்டும். இல்லை என்றால் லாரி பறிமுதல் செய்யப்படும். அத்துடன் செங்கல் சூளைளை நடத்த விட மாட்டேன் என்று இவர் விரட்டி வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது கணியம்பாடி பகுதியில்.

ஆக மொத்தத்தில் இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வேலூர் சரக டிஐஜி தேவராணி ஆகியோரின் காதுகளுக்கு எட்டியதா? இல்லையா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

செங்கல் சூளை அதிபர்கள் சுபாவின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றப்படுவார்களா? இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் கை கொடுப்பார்களா? என்பது தெரியவில்லை.

வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கார்க்தான் இதற்கு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்த வேண்டும் என்று இந்த செங்கல் சூளை அதிபர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

வடக்கு மண்டல ஐஜி சாட்டையை சுழற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்

CATEGORIES
TAGS