BREAKING NEWS

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேதிகள் அறிவிப்பு!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேதிகள் அறிவிப்பு!!

தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக  அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. கல்லூரிகளை பொறுத்தவரை ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகள் குறைந்து நிலைமை கட்டுக்குள் வந்த பின்மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகளில் வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு திட்டமிட்டபடியே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் செய்முறைக்கான தேதிகள்  குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த செமஸ்டருக்கான பாடங்கள் ஜூன் 16ம் தேதி வரை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான செய்முறை தேர்வுகள் ஜூன் 18ம் தேதி  தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன்  செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28ம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )