முகமது நபியை இழிவுபடுத்தி பேசிவிட்டு பாஜக நான்காம் தர அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

முகமது நபியை பாஜக செய்தி தொடர்பாளர் இழிவுபடுத்தி பேசியது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது ஐநா உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் நுபர் சர்மாவை கைது செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் பின்னர் அக்கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி அளித்த பேட்டியில் நுபுர் சர்மாவை கைது செய்யாமல் உலக நாடுகளிடம் ஒரு மாதிரியும் இந்தியாவில் வேறு மாதிரியும் நடந்து கொண்டு பாஜக நான்காம் தர அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
CATEGORIES தஞ்சாவூர்
