சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 6.45 லட்சம் மதிப்பில் பேவர் மற்றும் வாரகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து கயத்தார் யூனியன் கே துரைசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 6.45 லட்சம் மதிப்பில் பேவர் மற்றும் வாரகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார், ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், வேலாயுதபுரம் கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், கிளைச் செயலாளர்கள் செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, வள்ளிநாயகபுரம் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.