எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

எடப்பாடியார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை முன்னிட்டு கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜகுமார் தலைமையில் எட்டயபுரம் நகரம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் சுப்புலட்சுமி, வேலுசாமி அவைத்தலைவர் சேனா கணபதி. காட்டன் பிரபு, முனியசாமி, கருப்பசாமி உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
